×

சிறுவாபுரி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.78.63 லட்சம்

பெரியபாளையம்,டிச.30: சிறுவாபுரி முருகன் கோயிலில் கடந்த 2 மாதங்களில், 78லட்சத்து 63ஆயிரத்து 362ரூபாயும், தங்கம் 73.200 கிராமும், வெள்ளி 6 கிலோ 270 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு, 6 வாரங்கள் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக, செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி கோயில் வளாகத்தில் திருத்தணி உதவி ஆணையர் விஜயகுமார், கோயில் செயல் அலுவலர் மாதவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில், கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் என திரளானோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கை மூலம், 78லட்சத்து 63ஆயிரத்து 362 ரூபாயும், தங்கம் 73.200 கிராமும், வெள்ளி 6 கிலோ 270 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருப்பதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.

Tags : Siruvapuri Murugan Temple ,Periypalayam ,Siruvapuri ,Tiruvallur ,
× RELATED பெரியபாளையம் முதல் புதுவாயல்...