- வங்காள விரிகுடா
- சென்னை
- தென்மேற்கு வங்காள விரிகுடா
- மத்திய-மேற்கு வங்காள விரிகுடா
- தென் தமிழ்நாடு…
- தின மலர்
சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வலுப்பெறாமல் அதேநிலையில் அப்படியே நிலை கொண்டுள்ளது. அத்துடன் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இருந்து தென் தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இந்த நிகழ்வின் காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. அதேநிலை இன்றும் நீடித்து கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக 11, 12ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 13, 14ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
The post வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தம் நீடிப்பு 4 மாவட்டங்களில் கனமழை appeared first on Dinakaran.
