தூத்துக்குடி, மார்ச் 19: தூத்துக்குடி கடலில் சங்கு குளித்த மீனவர் மூழ்கி பலியானார். தூத்துக்குடி கீழஅலங்காரத்தட்டு பகுதியை சேர்ந்தவர் பிரதிஷ்ட்டன் (38). சங்குகுளி தொழிலாளியான இவர், திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து படகில் 10 பேருடன் கடலுக்குள் சங்கு குளிக்க சென்றுள்ளார். நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் கடலுக்குள் இறங்கிய அவர், நீண்ட நேரமாகியும் மேலே வரவில்லை. இதனால் படகில் இருந்த சக தொழிலாளர்கள் அவரை தேடியபோது அவர் கம்பரசரின் வயர் கால் முழுவதும் சுற்றிய நிலையில் கடலில் மயங்கி கிடந்துள்ளார்.
உடனடியாக சக மீனவர்கள் பிரதிஷ்டனை மீட்டு திரேஸ்புரம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரதிஷ்டனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மரைன் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post தூத்துக்குடி கடலில் சங்கு குளித்த மீனவர் பலி appeared first on Dinakaran.
