- பெரும்பாளை
- தர்மபுரி
- தர்மபுரி மாவட்டம்
- Rajamanickam
- சதீஸ்வரன்
- வேப்பமரத்துக்கோட்டை
- முத்துக்குமார்
- ஆலமரத்துப்பட்டி
- பழயூர் மேச்சேரி சாலை
தர்மபுரி, மார்ச் 14: தர்மபுரி மாவட்டம். பெரும்பாலை வேப்பமரத்துக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் சதீஸ்வரன்(24). இவர் பெட்ரோல் வாங்குவதற்காக அதேபகுதியை சேர்ந்த நண்பர் முத்துக்குமார் (24) என்பவருடன் டூவீலரில் சென்றார். பழையூர் மேச்சேரி சாலை ஆலமரத்துப்பட்டி அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த லாரி, இவர்களது டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சதீஸ்வரன், முத்துக்குமார் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பெற்ற சதீஸ்வரன், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து முத்துக்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி பெரும்பாலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பெரும்பாலையில் லாரி மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.
