×

ஆவடி தொகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடங்கள்: அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்

ஆவடி: ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 39வது வார்டில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதேபோல் ஆவடி மாநகராட்சி 34வது வார்டில், நாடாளுமன்ற உறுப்பினர் நிதி ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இந்த இரண்டு அங்கன்வாடி மைய கட்டிடங்களுக்கும் நேற்று திறப்பு விழா நடைபெற்றது.

இதில் அமைச்சர் சா.மு.நாசர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்களை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேயர் ஜி.உதயகுமார், ஆணையர் கந்தசாமி, கே.ஜே.ரமேஷ், சன் பிரகாஷ், 34வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரேவதி சங்கர், 41வது வார்டு சத்யா ரவி, 33வது வார்டு ஹரி, ஆவடி பாலா, மணிகண்டன், மாவட்ட உறுப்பினர் ஹரி, வட்டச் செயலாளர் யுவராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post ஆவடி தொகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடங்கள்: அமைச்சர் நாசர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Avadi ,Minister ,Nasser ,Avadi Assembly ,Avadi Corporation ,Dinakaran ,
× RELATED செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில்...