- அஷ்டமி
- திருத்தளிநாதர் கோவில்
- திருப்புத்தூர்
- திருப்புத்தூர் சிவகாமி அம்பாள் சமேத திருத்தளிநாதர்
- யோக பைரவர் கோவில்
- அஷ்டமி திருவிழா
- யோகா பைரவா
திருப்புத்தூர், மார்ச் 8: திருப்புத்தூர் சிவகாமி அம்பாள் சமேத திருத்தளிநாதர், யோக பைரவர் கோயிலில் நேற்று வளர்பிறை அஷ்டமி விழா சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றது. வளர்பிறை அஷ்டமி விழாவை முன்னிட்டு நேற்று பகல் 12.00 மணியளவில் யோக பைரவருக்கு பால், சந்தனம், தயிர், மஞ்சள், விபூதி, பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. யோக பைரவர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பெண்கள் பைரவர் சன்னதி முன்பு வெண்பூசணி, தேங்காய், எலுமிச்சம் பழம், மண் அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியும், வேண்டுதல் வைத்தும் வழிபாடு செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.
The post திருத்தளிநாதர் கோயிலில் அஷ்டமி சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.
