×

இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் தடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எடப்பாடி கோரிக்கை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக இந்துமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நேற்று தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட திமுகவின் நீட் அரசியல் குறித்து நான் பேசிய நிலையில், நாமும் மருத்துவர் ஆகிவிடலாம் என்கிற உயரிய லட்சியத்தோடு அல்லும் பகலும் படித்து வரும் மாணவர்கள் மத்தியில், இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

 

The post இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் தடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எடப்பாடி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Adimuka ,Secretary General ,Edapadi Palanisami ,Hindumati ,Viluppuram district ,Dindivanam ,Tamil Nadu Government ,
× RELATED சென்னை எழும்பூர்-தென்காசி இடையே...