×

தேய்பிறை அஷ்டமியையொட்டி சோழீஸ்வரர் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை

பொன்னமராவதி,பிப்.21: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சோழீஸ்வரர் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பொன்னமராவதியில் உள்ள ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது. கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மஹாருத்ரஹோமம், அபிஷேகம், சிறப்பு யாகம் அபிஷேகம் அலங்காரம், வெள்ளி அங்கி சாத்துதல், தீபாராதனை நடைபெற்றது. வடை மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் விழாக்குழு நிர்வாகிகள், சேதுபதி, பாஸ்கர், குமரன், சதீஸ்குமார், முருகேசன், உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் தேய்பிறை வழிபாடு நடைபெற்றது.

The post தேய்பிறை அஷ்டமியையொட்டி சோழீஸ்வரர் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Tags : Kalabhairava ,Choleswarar temple ,Theipirai Ashtami ,Ponnamaravathi ,Avudayanayaki Sametha Choleswarar temple ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்