×

திருச்சி, மதுரையில் டைடல் பூங்காக்கள் அமைக்க காணொளியில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: திருச்சி, மதுரையில் டைடல் பூங்காக்கள் அமைக்க சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
திருச்சி பஞ்சப்பூரில் 5.58 லட்சம் சதுர அடியில் ரூ.403 கோடியில் டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் 5.34 லட்சம் சதுர அடியில் ரூ.314 கோடியில் டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது. திருச்சி, மதுரையில் கட்டும் டைடல் பூங்காக்கள் மூலம் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மதுரை, திருச்சியில் தரை தளம் மற்றும் 12 தளங்களுடன் டைடல் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன.

கைவினை கலைஞர்களுக்கு முதல்வர் விருது வழங்கினார்

தமிழ்நாட்டில் சிறந்த 10 கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளை முதல்வர் வழங்கினார். 65 வயதுக்கு மேற்பட்ட 9 கைவினைஞர்களுக்கு ‘வாழும் கைவினை பொக்கிஷம்’ விருதுகள் வழங்கப்பட்டன. கைத்தறி தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி, படைப்புகளில் சிறந்த 10 கைவினை கலைஞர்களுக்கு விருது. டெல்லி தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்க புத்தாக்க பணிக்காக ரூ.50 லட்சம் காசோலையை தமிழ்ச் சங்க தலைவர் உள்ளிட்டோரிடம் முதல்வர் வழங்கினார். சண்டிகர் தமிழ் மன்றத்தின் கட்டட விரிவாக்கப் பணிக்காக ரூ.50 லட்சத்தை முதல்வர் வழங்கினார்.

The post திருச்சி, மதுரையில் டைடல் பூங்காக்கள் அமைக்க காணொளியில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Tidal Parks ,Trichy, Madura ,K. Stalin ,Chennai ,Chennai General Secretariat ,Tidal Park ,Trichy Punjab ,MADURAI MATUTHAVANI ,PM ,Dinakaran ,
× RELATED தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை...