×

மாடு முட்டி விவசாயி பலி

கிருஷ்ணகிரி, பிப்.15: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே என்.தாசிரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் குள்ளவேடி(85). விவசாயியான இவர், கடந்த மாதம் 21ம் தேதி நிலத்தில் மாடுகளை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது, ஒரு மாடு எதிர்பாராத நேரத்தில் பாய்ந்து சென்று குள்ளவேடியை முட்டியது. இதில், வயிற்றில் கொம்பு குத்தி படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி குள்ளவேடி உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாடு முட்டி விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : COW EGG ,Krishnagiri ,Krishnagiri District ,Veppanahalli, N. KULLAVEDI ,DASIRAPALLI AREA ,
× RELATED குறைதீர் கூட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு