×

3 சக்கர பேட்டரி வாகனத்தை, முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் இயக்குவது சட்டவிரோதம்: மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம்

சென்னை: சென்னையில் குப்பை எடுத்துச் செல்லும் 3 சக்கர பேட்டரி வாகனத்தை, முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் இயக்குவது சட்டவிரோதம் என மாநகராட்சிக்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. பேட்டரி வாகனம் மோதி காயமடைந்த சிறுமிக்கு ரூ.1.78 லட்சம் இழப்பீடு வழங்க, சிறுமியின் தந்தை தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டுனர் உரிமம் இல்லாதவர் வாகனத்தை இயக்கியதால் மாநகராட்சியே விபத்துக்கு பொறுப்பேற்கவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

The post 3 சக்கர பேட்டரி வாகனத்தை, முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் இயக்குவது சட்டவிரோதம்: மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம் appeared first on Dinakaran.

Tags : Motor Vehicle Accident Compensation Tribunal ,Chennai ,Dinakaran ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்