விருதுநகர், பிப்.11: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, ரேசன்கார்டு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு சென்று கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தின் சார்பில் தையல் இயந்திரம் கோரி விண்ணப்பித்த நபருக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பிலான தையல் இயந்திரத்தை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், டிஆர்ஓ ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.
