திருச்சி, பிப்.1: திருச்சி ரயில் நிலையம் முதலாவது நடைமேடையில் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணி ஒருவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு வாலிபர் ஒருவர் தப்பியோடினார். அவரை ரோந்து போலீசார் பிடித்து செல்போனை பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஒடிசா மாநிலம் கென்சாரை சேர்ந்த டப்பாஸ் குமார் லென்கா (33) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post செல்போன் பறித்த ஒடிசா வாலிபர் சிறையிலடைப்பு appeared first on Dinakaran.
