அரூர்,ஜன.23: அரூர் கடைவீதியில் உள்ள வாணீஸ்வரி சமேத வாணீஸ்வரர் கோயிலில் உள்ள காலபைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. முன்னதாக காலபைரவருக்கு அஷ்டமி யாகம் நடத்தப்பட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜை ஏற்பாடுகளை வாணீஸ்வரர் வழிப்பாடு சங்கம் உறுப்பினர்கள், அர்ச்சகர்கள் நாகராஜ், ரகு ஆகியோர் செய்திருந்தனர். அதேபோல் கோட்டை காளியம்மன் கோயிலிலும் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜைகள் நடைபெற்றது.
The post காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.
