மதுரை, ஜன. 17: தொடர் விடுமுறையொட்டி அழகர்கோவிலில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில் பண்டிகை தொடர் விடுமுறையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சாமி செய்ய வந்திருந்தனர். முன்னதாக மலைமேல் உள்ள நூபுரகங்கை தீர்த்தத் தொட்டியில் புனித நீராடி ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் சோலைமலை முருகன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்கார த்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி காட்சியளித்தார்.
மலைக்கு கீழே உள்ள சுந்தரராஜப் பெருமாள், தேவியர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதி கதவுகளுக்கு பக்தர்கள் சந்தனம் மற்றும் மாலைகள் சாற்றி வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், கிடாய் வெட்டியும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
The post தொடர் விடுமுறையொட்டி அழகர்கோவிலில் குவிந்த பக்தர்கள்: வரிசையில் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.
