×

போதைப்பொருள் வழக்கில் கைதான மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் தள்ளுபடி: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்கின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கைப்பேசி செயலி மூலம் போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஜெ.ஜெ.நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், போதைப்பொருள் கடத்தலில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்குக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தையடுத்து, ஜெ.ஜெ.நகர் போலீசார் துக்ளக்கை டிசம்பர் 4ம் தேதி கைது செய்தனர். துக்ளக்கின் ஜாமீன் கோரிய மனுவை அம்பத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி துக்ளக் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனக்கு ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார். இந்த மனு சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹெர்மிஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜராகி, ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் அலிகான் துக்ளக்கின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post போதைப்பொருள் வழக்கில் கைதான மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் தள்ளுபடி: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Mansoor Ali Khan ,Chennai ,Chennai Narcotics Control Court ,Ali Khan Tughlaq ,Mukherjee ,Dinakaran ,
× RELATED 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு...