×

பாஜக எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்.. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: கிரண் ரிஜிஜு வலியுறுத்தல்!!

டெல்லி: பாஜக எம்.பி. தாக்கப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில், அம்பேத்கர் விவகாரத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் என இரு தரப்பினரும் மாறி மாறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்.பி.க்களில் ஒருவரான பிரதாப் சந்திர சாரங்கிக்கு காயம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தன்னை தள்ளிவிட்டதாகவும் அதனால் காயம் ஏற்பட்டதாகவும் அவர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்; பாஜக எம்.பி.க்கள் மீது தாக்குதல் நடத்த ராகுல் காந்திக்கு அதிகாரம் கொடுத்தது யார் எனக் கேள்வி எழுப்பினார். உங்களை போல் மற்றவர்களும் வன்முறையில் ஈடுபட தொடங்கினால், என்ன நடக்கும் என்பதை ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன். ராகுல் காந்தியின் கோபம், விரக்தி மற்றும் நாடாளுமன்றத்தில் நடந்து கொண்ட விதம், அவருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. ராகுல் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செயலுக்காக நாட்டு மக்களிடமும், காயமடைந்த எம்பிக்களிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

The post பாஜக எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்.. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: கிரண் ரிஜிஜு வலியுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Bajaka ,Rahul Gandhi ,Kiran Rijiju ,Delhi ,M. B. ,Union Minister ,J. K. M. B. S ,India Alliance M. B. ,Bajaka M. B. ,Dinakaran ,
× RELATED பஞ்சாப் ஆளும் ஆம்ஆத்மியில் பரபரப்பு;...