×

உவரி அருகே காரில் கடத்தப்பட்ட 23 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

நெல்லை, டிச. 8: உவரி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 23 கிலோ புகையிலை பொருட்களை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 23 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.94 ஆயிரம் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். நெல்லை மாவட்டம் உவரி காவல் நிலைய எஸ்ஐ சங்கர் மற்றும் போலீசார் நேற்று அங்குள்ள செக்போஸ்ட் வழியாக வரும் வாகனங்களை சோதனையிட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அதில் 23 கிலோ 400 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தன. இதனையடுத்து காரையும் அதனை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள தேக்கங்குளம் தெற்கு தெருவை சேர்ந்த பச்சம்மாளை (26) உவரி காவல் நிலையத்திற்கு போலீசார் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து உவரி இன்ஸ்பெக்டர் சிவகளை மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து பச்சம்மாளை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து கார், 23 கிலோ 400 கிராம் புகையிலை பொருட்கள், ரூ.94 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post உவரி அருகே காரில் கடத்தப்பட்ட 23 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Uvari ,Nellie ,Dinakaran ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...