×

கொடைக்கானலில் டூவீலர்களை திருடிய வாலிபர் கைது

 

கொடைக்கானல், டிச. 8: கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியை சேர்ந்தவர் பாண்டி. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் தனது டூவீலரை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது இவரது டூவீலரை காணவில்லை. இதேபோல் வீட்டிற்கு முன்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் காணாமல் போய்விட்டது. இதேபோல் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் டேனியல் என்பவரின் டூவீலரும் மற்றும் அப்பகுதியில் நிறுத்தியிருந்த காரில் இருந்த மினி டிவியும் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து இவர்கள் அளித்த புகார்களின் பேரில் கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொடைக்கானல் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த முகேஷ் குமார் என்ற விக்கி (21) டூவீலர்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 2 டூவீலர்களையும் பறிமுதல் செய்தனர்.

The post கொடைக்கானலில் டூவீலர்களை திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kodaikanal Kodaikanal ,Bandi ,Anandagiri ,Godaikanal ,Bodaikanal ,Dinakaran ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்