×

குன்னம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு வாலிபர் போக்சோவில் கைது

 

குன்னம், அக். 17: குன்னம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு வாலிபர் போக்கோவில் கைது செய்யப்பட்டார். குன்னம் அருகே உள்ள புதுவேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து மங்களமேடு மகளிர் போலீசில் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள புதுவேட்டக்குடி கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் அதே கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

கோவில்பாளையம் கிராமம் அண்ணா நகரை சேர்ந்த சத்தியசிவம் (20) என்பவர் கடந்த ஓராண்டாக அந்த மாணவியை பின்தொடர்ந்தும் அவ்வபோது பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. பல முறை மாணவியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அவரை பிடித்து எச்சரிக்கை அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்கு வந்த மாணவியிடம் சத்தியசிவம் தகாத முறையில் கையைப் பிடித்து இழுத்து கட்டிப்பிடித்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவனை பிடித்து மங்களமேடு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு மகளிர் போலீசார் வாலிபரை கைது செய்தனர்

The post குன்னம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு வாலிபர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Gunnam ,Bocso ,Boko ,Puduvetakkudi village ,
× RELATED குன்னம் அருகே 130 கிலோ குட்கா பறிமுதல்: இருவர் கைது