×

அரியலூரில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம்

 

அரியலூர், அக்.15: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் 291 மனுக்கள் பெறப்பட்டது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 291 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் மூலம் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சுமதி மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

The post அரியலூரில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : People's Grievance Day ,Ariyalur ,Grievances ,People's Grievance Redressal Day ,District Collector ,Rathnaswamy ,
× RELATED வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி நடைபாதை அமைத்து தர வலியுறுத்தல்