×

பெரம்பலூர் கோட்டத்தில் நாளை 57 கிராமங்கள், 8 நீருந்து நிலையங்களில் மின் நிறுத்தம்

 

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள எசனை துணைமின் நிலை யத்தில் நாளை (15ம் தேதி) செவ்வாய்க் கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின் வினியோகம் பெறப்படும் கோனேரிப் பாளையம், சொக்கநாத புரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டை மலை சந்து, அனுக்கூர், சோமண்டாப் புதூர், வேப்பந்தட்டை, பாலையூர், குரும்பலூர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் ஆகிய 17 கிராமங்கள் மற்றும் காவிரி நீருந்து நிலையங்களான ஆலம்பாடி, எசனை, வேப்பந்தட்டை ஆகியப் பகுதிகளிலும் காலை 9மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என எசனை துணைமின் நிலைய உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் அருகே கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (15ம்தேதி) செவ்வாய்க் கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்வினியோ கம் பெறப்படும், கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்க்குப்பை, அன்ன மங்கலம், அரசலூர், முகமதுபட்டணம், வெங்கலம், தழுதாழை, பாண்டகப்பாடி, உடும்பியம், வெங்கனூர், பெரியம்மா பாளையம், பிள்ளையார் பாளையம், தொண்டப்பாடி, ஈச்சங்காடு, பூம்புகார், பாலையூர், பெரியவடகரை, வெண்பாவூர், தொண்ட மாந்துறை, விசுவக்குடி ஆகிய 21 கிராமங்களில், காலை 9 மணி முதல் மின் விநியோகம் இருக்காது எனக் கிருஷ்ணாபுரம் துணைமின் நிலைய உதவி செயற்பொறியாளர் மாணிக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் துணைமின் நிலையத்தில் நாளை (15 ம்தேதி) செவ்வாய்க் கிழமை, மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால், இங்கிருந்து மின்வினியோகம் பெறக் கூடிய சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், செட்டிக்குளம், நாட்டார் மங்கலம், குரூர், நாரண மங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுள் பாளையம், தீரன்நகர், நொச்சியம்,விஜயகோபால புரம், செல்லியம்பாளையம், புது நடுவலூர், ரெங்கநாத புரம், செஞ்சேரி, தம்பிரான் பட்டி, மலையப்ப நகர் ஆகிய 19 கிராமங்களில் மற்றும் பெரகம்பி, காரை, அயிலூர், நாரணமங்கலம், செட்டிக்குளம் ஆகிய 5 நீரேற்று நிலையங்கள் ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் பராமரிப்புப் பணிகள் முடிவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என சிறுவாச்சூர் துணைமின் நிலைய உதவி செயற் பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இதன்படி நாளை (15ம் தேதி) செவ்வாய்க் கிழமை மொத்தம் 57 கிராமங்களிலும், 8 நீருந்து நிலையங்களிலும் மின் விநியோகம் இருக்காது.

The post பெரம்பலூர் கோட்டத்தில் நாளை 57 கிராமங்கள், 8 நீருந்து நிலையங்களில் மின் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Esanai ,Konerip Palayam ,Chokanathapuram ,Alamabadi ,Century ,Dinakaran ,
× RELATED மக்காச்சோளம் விதைப்பில் பெண்கள் மும்முரம்