×

இன்ஸ்டாகிராமில் பழகி பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல்

திண்டிவனம், அக். 17: திண்டிவனம் அருகே இன்ஸ்டாகிராமில் பழகி பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 4 இளைஞர்களை போக்சோவில் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது பள்ளி மாணவி தனது தந்தை உயிரிழந்த நிலையில், தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி அதே ஊரைச் சேர்ந்த முருகன் மகன் முரளி (23), ஜானகிராமன் மகன்கள் தனசேகர் (20) மற்றும் திருநாவுக்கரசு (21), பிரதாபன் மகன் பிரகலாதன் (21) ஆகிய 4 பேரிடமும் இன்ஸ்டாகிராமில் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த இளைஞர்கள் சிறுமி இன்ஸ்டாகிராமில் பழகி வந்ததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அந்த பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தனியாக வரவழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இளைஞர்கள் 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். திண்டிவனம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 13 வயது பள்ளி மாணவியிடம் தனித் தனியாக பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ள இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post இன்ஸ்டாகிராமில் பழகி பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல் appeared first on Dinakaran.

Tags : Tindivanam ,POCSO ,Villupuram district ,
× RELATED வழிப்பறியில் ஈடுபட்ட புதுவை வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது