×

தமிழ்நாடு அரசு தகவல்: ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது


சென்னை: பருவமழையின் போது ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும். குமரி முதல் சென்னை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் அரை கிலோ பால் பவுடர் 4,000 பாக்கெட்டுகள் என 20 டன் பால் பவுடர் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு உட்பட்ட ஆவின் மண்டல அலுவலகங்களில் 9,000 கிலோ பால் பவுடர், மேலும் 90 நாள்கள் கெடாமல் இருக்கக்கூடிய அரை லிட்டர் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் 50,000 அரை லிட்டர் பால் பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆவடி, அண்ணாநகர், தியாகராயர் நகர், பூவிருந்தவல்லி, வேளச்சேரி, மாதவரம், விருகம்பாக்கம், நங்கநல்லூர் பாலகங்களில் தலா 1,000 கிலோ பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாடு அரசு தகவல்: ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,CHENNAI ,Kumari ,Tamilnadu government ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று முதல்...