×

மதரஸாக்களுக்கு அரசு வழங்கும் உதவிகளை நிறுத்தக் கூடாது: எஸ்டிபிஐ வலியுறுத்தல்


சென்னை: எஸ்டிபிஐ கட்சி தேசிய தலைவர் எம்கே.பைஸி நேற்று வெளியிட்ட அறிக்கை: நம் நாட்டில், மதரஸா கல்வி முறை நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது. அதன் செயல்பாட்டில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதனை சரி செய்யும் நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டுமே தவிர, ஒட்டுமொத்தமாக அந்த அமைப்பையே சிதைக்க நினைப்பது ஏற்புடையதல்ல. மதரஸாக்களில் மதக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும் வடஇந்திய மதரஸாக்களில் முறையான நவீனக் கல்வியும் அளிக்கப்படுகிறது.

இந்த அமைப்பில் தொழில்முறை ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் இல்லாவிட்டால், அந்தந்த மதரஸா வாரியங்கள் மூலம், தொழில்முறை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதையும், போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்படுவதையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். ஆகவே, மதரஸாக்களின் செயல்பாடு தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைகளை, பிரச்னைகளை சரிசெய்யும் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் அரசு உதவியை தடுத்து நிறுத்தக் கூடாது.

The post மதரஸாக்களுக்கு அரசு வழங்கும் உதவிகளை நிறுத்தக் கூடாது: எஸ்டிபிஐ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : STBI ,CHENNAI ,STBI Party ,National President ,MK Paisi ,Madrasahs ,Dinakaran ,
× RELATED வக்பு வாரிய கூட்டத்தில் என்ஓசி...