×

திமுக இளைஞரணி சார்பில் திருநின்றவூரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்

திருவள்ளூர், அக்.11: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திருநின்றவூரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சரும், மத்திய மாவட்டச் செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நடுக்குத்தகை கே.சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் பிரபு கஜேந்திரன், அப்துல் மாலிக், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆர்.செந்தாமரை, ஜிசிசி.கருணாநிதி, வி.ஜே.உமாமகேஸ்வரன், அக்னி மா.செ.ராஜேஷ், தெ.பிரியா குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த விழாவில் மாநில ஆதிதிராவிடர் நல அணிச் செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்டச் செயலாளர்கள் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, நடுக்குத்தகை கே.ஜெ.ரமேஷ், மாவட்ட அவைத்தலைவர் ம.ராஜி, திருநின்றவூர் நகரச் செயலாளர் தி.வை.ரவி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

The post திமுக இளைஞரணி சார்பில் திருநின்றவூரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Artist ,Centenary Library ,Thiruninnavur ,DMK Youth ,Deputy Chief Minister ,Udhayanidhi ,Tiruvallur ,Thiruvallur Central District ,Artist Centenary Library ,Tiruninnavur ,Tamil Nadu Minority Welfare ,Overseas Tamils ,Welfare ,Minister ,Central District Secretary ,Avadi ,Artist Centenary ,Library ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக...