×

வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைக்கும் பணி துவக்கம்

தொண்டி, அக். 5: தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைக்கும் பணி துவங்கியது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்கள் , ஊராட்சிகள், பேருராட்சிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் அமைத்து குடி நீர் வழங்கும் திட்டத்தை அரசு துவங்கியுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இப்பணி முடிவடைந்துள்ளது. நேற்று தொண்டி பேருராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இப்பணி துவங்கியது. பேரூராட்சி தலைவி ஷாஜகான் பானு ஜவஹர் அலி கான் தலைமையில் செயல் அலுவலர் ரபீக் ராஜா முன்னிலை வகித்தார். துணைத் தலைவி, வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைக்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Charity ,Jal ,Thondi Municipal Corporation ,
× RELATED கர்நாடக கோயில்களில் நந்தினி நெய் – அறநிலையத்துறை உத்தரவு