×

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம்

திண்டுக்கல்: காந்தி ஜெயந்தியையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

கிராம சபை கூட்டத்தில் கிராம நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் 01.04.2023 முதல் 31.03.2024 வரையிலான 2023- 2024ம் ஆண்டு தணிக்கை அறிக்கைக்கு கிராமசபை ஒப்புதல் பெறுதல், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் முதலான பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Gram Sabha ,Dindigul district ,Dindigul ,Gandhi ,Jayanti ,Collector ,Poongodi ,
× RELATED ஆண்டிமடம் கிராம சபை கூட்டம்