×

டிராக்டரில் மண் திருடியவர் கைது

பேரையூர், செப். 21: பேரையூரை அடுத்து பழையூர் பகுதியில் அத்திபட்டி விஏஓ அந்தோணி பாரதிமோகன் மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக கரம்பை மண் ஏற்றிவந்த டிராக்டரை மறித்து சோதனை செய்ததில், திருட்டுத்தனமாக மண் அள்ளிவந்தது தெரியவந்தது. டிராக்டரை ஓட்டி வந்த கேத்துவார்பட்டியைச் சேர்ந்த வனராஜா மகன் சிவராஜா(36), டிரைலரை கழற்றிவிட்டு, டிராக்டர் இன்ஜினுடன் புறப்பட்டு சென்றுவிட்டார். இதுகுறித்து விஏஓ கொடுத்த புகாரின்பேரில் சாப்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைலரை பறிமுதல் செய்தனர். பின்னர், இத்திருட்டில் உடனிருந்த வனராஜா மகன் அன்பழகன்(33) என்பவரை கைது செய்தனர்.

The post டிராக்டரில் மண் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Beraiyur ,Athipatti VAO ,Anthony Bharathimohan ,Palayur ,Peraiyur ,Dinakaran ,
× RELATED பேரையூர் அருகே நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றவர் கைது