×

டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

பேரையூர், அக். 16: பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று டி.கல்லுப்பட்டி பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி சேர்மன் முத்துக்கணேசன் தலைமையிலும், வார்டு கவுன்சிலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அருள்குமார், குழந்தைகள் வளர்ச்சி திட்டஅலுவலர் நூருல் அனிஷா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

அதில் சுகாதார ஆய்வாளர் சண்முகம், கிராம சுகாதார செவிலியர், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மயானம் மற்றும் கோகுல் நகர், கண்மாய்க்ரை, கள்ளிக்குடி ரோடு முக்குச்சாலை ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் மூலம் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது. பள்ளிகளில் உள்ள கழிவறைகளை சுத்தமாக முறையாக பராமரிக்க பயன்படுத்த எடுத்துரைக்கப்பட்டது. டி.கல்லுப்பட்டியில் இருந்து குச்சம்பட்டிக்கு கூடுதலாக அரசு பஸ் வசதி செய்து தர எடுத்துரைக்கப்பட்டது.

The post டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : protection ,D. Kallupatti ,Beraiyur ,Beraiyur taluka ,T.Kallupatti ,Muthukanesan ,protection committee ,Dinakaran ,
× RELATED மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் 2...