×

குறைதீர் முகாமில் 70 மனுக்களுக்கு தீர்வு

தர்மபுரி, செப்.12: தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் நடந்தது. ஏடிஎஸ்பி பாலப்பிரமணியம் முன்னிலை வகித்தார். முகாமில், மாவட்டம் முழுவதும் 31 போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து, புகார் மனுதாரர்கைள நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்னை, குடும்ப தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் அடங்கிய 73 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 70 மனுக்கள் மீது விசாரணை முடித்து வைக்கப்பட்டது. முகாமில், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post குறைதீர் முகாமில் 70 மனுக்களுக்கு தீர்வு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri District Police ,SP ,Maheswaran ,ADSP ,Balapramaniam ,
× RELATED ஓட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட...