×

வியாபாரியை மிரட்டியவருக்கு வலை

உடன்குடி,செப்.18: உடன்குடி மரியம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் ராஜன் (54). வில்லிகுடியிருப்பில் இவர் தான் நடத்திவரும் ஓட்டலில் கடந்த 11ம்தேதி இரவு வியாபாரம் முடிந்தபிறகு பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பண்டாரஞ்செட்டிவிளையை சேர்ந்த ஜெயராமனின் மகன் ராகுல் (30), ஆம்லெட் போட்டு தருமாறு கோரினார், ஆனால் கடையை மூடிவிட்டதால் ஆம்லெட் போட முடியாது என ராஜன் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ராகுல், ராஜனுக்கு மிரட்டல் விடுத்துச் சென்றார். புகாரின்பேரில் வழக்குப் பதிந்த குலசேகரன்பட்டினம் போலீசார், ராகுலை தேடி வருகின்றனர்.

The post வியாபாரியை மிரட்டியவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Ebengudi ,Rajan ,Ebengudi Mariammalpuram ,Willikudiriru ,Jayaraman ,Rahul ,Bandaranchettivilai ,
× RELATED வேப்பங்காட்டில் பள்ளி ஆண்டு விழா