×

ஆம்பக்குடியில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

 

சிவகங்கை, செப். 11: காரைக்குடி அருகே ஆம்பக்குடி கிராமத்தில் நாளை மக்கள் தொடர்பு முகாம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: காரைக்குடி தாலுகா, ஆம்பக்குடி கிராமத்தில், இன்று (செப்.11) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த மக்கள் தொடர்பு முகாம் நிர்வாக காரணங்களால் நாளை (செப்.12) நடைபெற உள்ளது. நாளை காலை 10.00 மணிக்கு முகாம் நடைபெறும்.

அரசுத் துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே முகாமின் நோக்கமாகும். எனவே, மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post ஆம்பக்குடியில் நாளை மக்கள் தொடர்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Ambakkudi ,Sivagangai ,Karaikudi ,Collector ,Asha Ajith ,Karaikudi taluk ,
× RELATED நாளை ரேசன் குறைதீர் கூட்டம்