×

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி

 

கடத்தூர், செப்.10: கடத்தூர் மேற்கு ஒன்றியம், கசியம்பட்டி கிராமத்தில் ₹18.50 லட்சத்தில் 30ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கடத்தூர் கிழக்கு ஒன்றியம் தொங்கணூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் ₹18.42 லட்சத்தில் 30ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகள் தொடங்கின.

மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன், தர்மபுரி திமுக எம்பி ஆ.மணி ஆகியோர் பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் கடத்தூர் ஒன்றிய செயலாளர்கள் நெப்போலியன், சிவப்பிரகாசம் மற்றும் சிந்தல்பாடி ஊரட்சி மன்ற தலைவர் பத்மாவதி சரவணன், குபேந்திரன், மணியம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா, கவுன்சிலர் ராணி அம்பேத்கர், குப்புசாமி, வக்கீல் முனிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி appeared first on Dinakaran.

Tags : Kadoor ,Kasiyampatti village ,Kadoor West ,Union ,Thangunur Government Higher Secondary School ,Kadoor East Union ,Dinakaran ,
× RELATED மழையால் அறுந்து விழுந்த மின்கம்பி