×

ஜாபர் சேட்டுக்கு எதிரான வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றத்துக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சென்னையில் வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்பப்பட்டது தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த ஜாபர் சேட், அவரது மனைவி பர்வீன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை 2011ம் ஆண்டு ஊழல் வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின்கீழ் ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறை கடந்த 2020ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வு ஊழல் வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், அதே விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க முடியாது என்று கூறி, அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

ஆனால், அதன் பிறகு சில விளக்கங்களை பெறுவதற்காக வழக்கை மீண்டும் நீதிபதிகள் விசாரிக்க தொடங்கினர். இந்தநிலையில் ஜாபர் சேட் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் .எஸ்.ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் “ வழக்கை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டுக்கு இடைக்கால தடை விதித்து, அமலாக்கத்துறை பதிலளிக்க பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பினர். வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

 

The post ஜாபர் சேட்டுக்கு எதிரான வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றத்துக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : on High Court ,Zafar Chet ,Supreme Court ,New Delhi ,IPS ,Parveen ,Chennai ,High Court ,Jaber Chet ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடைகோரி...