×

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு: மாணவர்களிடம் மன அழுத்தத்தை குறைக்க பிரத்யேக உளவியல் ஆலோசனை மையங்கள் அமைக்க பரிந்துரை

சென்னை: கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் மாணவர்களிடம் மன அழுத்தத்தை குறைக்க பிரத்யேக உளவியல் ஆலோசனை மையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பன்னோக்கு சிறப்புக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. போலி NCC முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட பன்னோக்கு சிறப்புக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் சிறப்பு குழுவானது சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கியதாகவும். பாதிப்பிலிருந்து விரைந்து மீட்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி NCC முகாம் நடத்தப்பட்டதாக கூறப்படும் மற்ற பள்ளிகளுக்கும் சென்று அங்கும் பல்வேறு உளவியல் ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போக்சோ புகார்களை எப்படி வழங்குவது ஆசிரியர்கள் அதை எப்படி கையாள்வது உள்ளிட்ட ஆலோசனையும் வழங்கியுள்ளதாகவும். பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட மாணவிகளுக்கு மன அழுத்தம் உள்ளதா என கண்டறியப்பட்டுள்ளதாகவும். மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்கால பாதுகாப்பு குறித்தும் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்களை தடுக்கும் வகையில் நடைமுறையில் உருவாக்க சிறப்பு குழு அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நிர்வகிக்க தனியார் பள்ளி கல்வி இயக்குனருக்கு தற்போது பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளதாகவும். அந்த பரிந்துரை தீவிர பரிசீலனையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு செப்டம்பர்.12-க்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு: மாணவர்களிடம் மன அழுத்தத்தை குறைக்க பிரத்யேக உளவியல் ஆலோசனை மையங்கள் அமைக்க பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pannoku Special Committee ,CBI ,NCC ,
× RELATED நில ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக...