×

லாலாபேட்டையில் குட்கா விற்ற ஒருவர் மீது வழக்கு

கரூர், செப். 5: கரூர் மாவட்டத்திற்குட்பட்ட லாலாப்பேட்டை பகுதியில் பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்ற ஒருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர்.
மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம், லாலாப்பேட்டை அடுத்துள்ள பிள்ளாபாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிந்து அவரிடம் இருந்து 40 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.

The post லாலாபேட்டையில் குட்கா விற்ற ஒருவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Gutka ,Lalapettai ,Karur ,Lalappet ,Karur district ,Dinakaran ,
× RELATED வேலாயுதம்பாளையம் அருகே பெட்டிக்கடையில் 400 கிராம் குட்கா பறிமுதல்