×

ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மக்களைத் தேடி மருத்துவ முகாம்

 

வேலாயுதம்பாளையம், செப்.14: கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் அருகே குறுக்கு சாலை பகுதியில் ஓலப் பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மக்களைத் தேடி மருத்துவ முகாம் நடந்தது. கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் அருகே குறுக்கு சாலை பகுதியில் ஓலப் பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சுகாதார செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று வீட்டில் உள்ள முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கு காய்ச்சலை கண்டறியும் மக்களைத் தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் பொதுமக்களிடமிருந்து ரத்தம் எடுக்கப்பட்டு ரத்தத்தில் சர்க்கரை அளவு ரத்த அழுத்த அளவு குறித்த பரிசோதனை, உடல் பரிசோதனை செய்தனர். மேலும், பொதுமக்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி, இருமல், சளி, உடல் வலி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குறித்து பரிசோதனைகள் செய்தனர். அவர்களுக்கு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும், சளி மற்றும் காய்ச்சல் வராமல் இருப்பதற்கு பொதுமக்கள் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்தும், பொதுமக்கள் அதிகளவு கீரைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடம் தெரிவித்தனர். பொதுமக்கள் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள பழ வகைகள், காய்கறி வகைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

The post ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மக்களைத் தேடி மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Olapalayam Primary Health Center ,Velayuthampalayam ,Olappalayam Government Primary Health Center ,Karur district ,Velayutham Palayam, Karur District ,Olappalayam Primary Health Center ,
× RELATED வேலாயுதம்பாளையம் அருகே தூய்மை பணியாளருக்கு நிவாரணம் வழங்கல்