×

மாணவிகள் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் வலை காட்பாடியில் பள்ளி செல்லும் வழியில்

வேலூர், செப்.5: காட்பாடியில் பள்ளி செல்லும் வழியில் மாணவிகள் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூரை சேர்ந்தவர் வினோத்(35). இவருக்கு திருமணமாகி, மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில், வினோத் குடிபோதையில் பள்ளி மாணவிகளை பின்தொடர்ந்து சென்று ஆபாச பாட்டு பாடுவது, கேலி கிண்டல் செய்வது, ஆபாச சைகை காட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவாராம். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த அக்கா, தங்கையை போதையில் இருந்த வினோத் பின்தொடர்ந்து சென்றாராம். அப்போது ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் திடீரென ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிர்வாண போஸ் கொடுத்தாராம். மேலும் மாணவிகளை உல்லாசமாக இருக்க வரும்படி அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் அலறியடித்து ஓடிச்சென்று வீட்டில் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் காட்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷியாமளா மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வினோத்தை தேடி வருகின்றனர்.

The post மாணவிகள் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் வலை காட்பாடியில் பள்ளி செல்லும் வழியில் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Gadpadi ,Vinod ,Gadpadi Kangeyanallur ,Vellore district ,
× RELATED மாணவிகள் முன் நிர்வாண போஸ் உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர்