×

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் குறித்து விளக்கம்: தமிழ்நாடு அரசு அறிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள், அமைப்பாளர்கள், செய்ய வேண்டிய, செய்யக்கூடாத பணிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வாயிலாக சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தென்மண்டலம்) வாயிலாக பெறப்படும் அறிவுறுத்தல்கள் பொதுமக்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் செய்தி வெளியீடு வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையானது, விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்கள், அமைப்பாளர்கள், சிலை செய்வோர் மற்றும் பொதுமக்களுக்கு மட்டுமே உரிய அறிவுறுத்தல்கள் ஆகும். இவ்வாறு பள்ளிகளுக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள், அரசின் ஆணைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதால், ஒரு சில மாவட்டங்களில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றது. மேலும், இவ்வாறு தவறான சுற்றறிக்கை அனுப்பியதற்கு பொறுப்பான அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் குறித்து விளக்கம்: தமிழ்நாடு அரசு அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Vinayagar Chaturthi Festival ,Chennai ,Tamil Nadu Government ,Tamil Nadu Pollution Control Board ,Vinayagar Chaturthi ,Dinakaran ,
× RELATED சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா...