×

ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் ஆபீசுக்கு மனுக்களை மாலையாக அணிந்து உருண்டு வந்தவரால் பரபரப்பு

போபால்: ஊராட்சி தலைவர் மீதான ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்தவர், கலெக்டர் ஆபீசுக்கு மனுக்களை மாலையாக அணிந்து உருண்டு வந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்தியபிரதேச மாநிலம் நிமுச் மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ் பிரஜாபதி. இவரது கிராமத்துக்கு உட்பட்ட ஊராட்சி தலைவர் கன்கரியா ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கடும் விரக்தியடைந்தார்.

இந்நிலையில், புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் முகேஷ், நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு ஏற்கனவே கொடுத்த மனுக்களை மாலையாக அணிந்து உருண்டு வந்தார். ஊராட்சி தலைவர் செய்த ஊழல்கள் தொடர்பான ஆவணங்கள் என கூறி சில ஆவணங்களையும், ஏற்கனவே புகார் அளித்த மனுக்களையும் மாலையாக அணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு உருண்டு வந்தார். உடனே அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

The post ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் ஆபீசுக்கு மனுக்களை மாலையாக அணிந்து உருண்டு வந்தவரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Collector's Office ,Bhopal ,Mukesh Prajapati ,Nimuch District, Madhya Pradesh ,
× RELATED திருவள்ளூர் நகராட்சியில் 24 நடைபாதை...