×

சிறுவனை கடத்தி திருமணம் செய்த இளம்பெண் குடியாத்தம் மகளிர் போலீசார் விசாரணை பேரணாம்பட்டு அருகே பரபரப்பு

குடியாத்தம், செப். 4: பேரணாம்பட்டு அருகே 17 வயது சிறுவனை கடத்தி இளம்பெண் திருமணம் செய்து ெகாண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து குடியாத்தம் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். அதே பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம் பெண், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சிறுவனுடன் சித்தி முறையான இளம்பெண், கடந்த ஓராண்டாக நெருக்கமாக பழகி வந்தார். மேலும் சிறுவனை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண், சிறுவனை வீட்டில் இருந்து அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் இருவரும் வீடு திரும்பவில்லை.

பின்னர் இருவரது குடும்பத்தினரும் விசாரித்ததில், சிறுவனை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்ற இளம்பெண் குடியாத்தம் அடுத்த சிந்தகணவாய் முனீஸ்வரர் கோயிலில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து சிறுவனுடன் இளம்பெண் தலைமறைவாக உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமி, குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்படி வேலூர் எஸ்பி மதிவாணன் உத்தரவின்படி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனையும், இளம்பெண்ணையும் தேடி வருகின்றனர். 17 வயது சிறுவனை கடத்தி இளம்பெண் திருமணம் செய்து ெகாண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சிறுவனை கடத்தி திருமணம் செய்த இளம்பெண் குடியாத்தம் மகளிர் போலீசார் விசாரணை பேரணாம்பட்டு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Gudiyattam Women ,Peranamptu ,Kudiatham ,Peranampatu ,Kudiatham women ,Peranamptu, ,Vellore district ,Gudiyattam ,
× RELATED விவசாயியின் செல்போனை ஹேக் செய்து ₹11...