×

கிருஷ்ணகிரி அருகே மாணவி பலாத்கார சம்பவத்தில் மேலும் 2 பேரிடம் விசாரணை?: ஒரு வாரத்திற்கு பிறகு, பள்ளி நாளை திறப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மாணவி பலாத்கார சம்பவத்தில் மேலும் 2 பேரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஒரு வாரத்திற்கு பிறகு பள்ளி நாளை 27ம் தேதி திறக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளி ஒன்றில் போலி என்.சி.சி. முகாம் கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடந்தது. அதில் பங்கேற்ற 8ம் வகுப்பு படிக்க கூடிய 13 வயது மாணவி போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் சில மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானார்கள்.

இது தொடர்பாக சிவராமன், உடந்தையாக இருந்த பள்ளி தாளாளர், முதல்வர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் ஐ.ஜி.பவானீஸ்வரி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது நடவடிக்கைக்கு முன்பாக விஷம் குடித்த சிவராமன், கடந்த 23ம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இன்று சிறப்பு புலனாய்வு குழுவினர் 5வது நாளாக விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே கிருஷ்ணகிரி அருகே கடந்த 8ம் தேதி மாணவி பலாத்கார சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

அதே போல கடந்த ஜனவரி மாதம் மற்றொரு பள்ளியில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி, 9ம் வகுப்பு படிக்க கூடிய 14 வயது மாணவி சிவராமனால் பலாத்காரம் செய்யப்பட்டார். அது தொடர்பாக கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அந்த வழக்கிலும் ஒருவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே கிருஷ்ணகிரி அருகே போலி என்.சி.சி. முகாம் நடந்து மாணவிகளுக்கு கொடுமை நடந்த பள்ளி ஒரு வாரமாக செயல்படவில்லை. நாளை (27ம் தேதி) பள்ளி திறக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கிருஷ்ணகிரி அருகே மாணவி பலாத்கார சம்பவத்தில் மேலும் 2 பேரிடம் விசாரணை?: ஒரு வாரத்திற்கு பிறகு, பள்ளி நாளை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,NCC ,
× RELATED போலி என்சிசி முகாம் நடந்த...