×

கரூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும்

கரூர், ஆக. 26: கரூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தின் மத்திய பகுதியாக கரூர் மாவட்டம் உள்ளது. கரூர் மாநகரின் மையப் பகுதியில் பஸ் நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பஸ் செல்கிறது. முக்கிய மூன்று தொழில்களை கொண்ட மாவட்டமாக கரூர் விளங்கி வரும் நிலை யில், இங்கிருந்து தமிழகத்தின பிற பகுதிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களுக்கும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இதே போல், தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கரூரில் இருந்து இரவு நேரங்களில் கூடுதலாக அரசு பஸ்கள் சென்னைக்கு இயக்கப்பட்ட நிலையில், தற்போது, அந்த பேருந்து வசதிகள் குறைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, கரூரில இருநது சென்னைக்கு செல்லும் அனைவரும் திருச்சி, சேலம் போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து சென்னை சென்று வருகின்றனர்.

எனவே, கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ்களை இயக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதன் முக்கியத்துவம் கருதி கூடுதல் பேருந்துகள் இயக்க விரைந்து நடவடிககை எடுக்க வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கரூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Karur bus station ,Chennai ,Karur ,Karur district ,Tamil Nadu ,Tamilnadu ,
× RELATED கரூர் – திருச்சி சாலையில் விபத்து...