×

கால்பந்து போட்டியில் பள்ளபட்டி அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் விளையாட தகுதி

 

அரவக்குறிச்சி, ஆக. 22: கால்பந்து போட்டியில் பள்ளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் விளையாடுவதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான கால்பந்துப் போட்டி கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பள்ளபட்டி, ஈசநத்தம், அரவக்குறிச்சி, க. பரமத்தி ஆகிய பகுதிகளைச் சார்ந்த பள்ளிகளிலிருந்து மாணவர்கள் இப் போட்டியில் பங்கேற்றனர். பள்ளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பல பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளனர்.14 வயதுக்குட்பட்டவர் பிரிவிலும், 17 வயதுக்குட்பட்டவர் பிரிவிலும், 19 வயதுக்குட்பட்டவர் பிரிவிலும் பள்ளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று மாவட்ட அளவில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றனர்.

இதேபோல, 19 வயதுக்குட்பட்டவர் பிரிவில் மாணவிகளும் முதலிடம் பெற்று மாவட்ட அளவில் விளையாடும் தகுதியை பெற்றனர். மேலும் 17 வயதுக்குட்பட்டவர் பிரிவிலும், 14 வயதிற்குட்பட்டவர் பிரிவிலும் இரண்டாம் இடத்தைப் பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை, கல்விக் குழு உறுப்பினர்கள், ஆசிரிய,ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பாராட்ட வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

 

The post கால்பந்து போட்டியில் பள்ளபட்டி அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் விளையாட தகுதி appeared first on Dinakaran.

Tags : Pallapatti Government School ,Aravakurichi ,Pallapatti Govt Higher Secondary School ,Karur District Sports Hall ,Pallapatti ,Esanantham ,K. Paramathi… ,Dinakaran ,
× RELATED கரூர் அருகே பள்ளப்பட்டியில் தெரு நாய் கடித்து குழந்தை காயம்!!