- முதல் அமைச்சர்
- திட்டம்
- திருப்பலுக்கன்ரம்
- அமைச்சர்
- சதுரங்கப்பட்டினம் பஞ்சாயத்
- திருக்கழுகுண்டம் ஒன்றியம்
- செங்கல்பட்டு
- துணை கலெக்டர்
- நாராயண சர்மா
- சதுரங்கப்பட்டினம் ஊராட்சி மன்றம்
- ஜனாதிபதி
- ரேவதி சாமிநாதன்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சதுரங்கப்பட்டினம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு செங்கல்பட்டு மாவட்ட சார் ஆட்சியர் நாராயண சர்மா தலைமை தாங்கினார். சதுரங்கப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி சாமிநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, முன்னாள் எம்எல்ஏ தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழு தலைவர் அரசு ஆகியோர் முகாமை துவக்கி வைத்து பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். முகாமில், சதுரங்கப்பட்டினம், மணமை, கடம்பாடி, குன்னத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கினர். இதில், திருக்கழுக்குன்றம் ஒன்றிய துணை சேர்மன் பச்சையப்பன், தாசில்தார் ராதா, வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனுக்கள் வழங்க குவிந்த பொதுமக்கள் appeared first on Dinakaran.