×

ரயிலில் பாய்ந்து திருவள்ளூர் எஸ்எஸ்ஐ தற்கொலை?

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலைய 2வது பிளாட்பாரம் அருகே நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஒருவர் ரயிலில் சிக்கி பலியானதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தை மீட்ட அரக்கோணம் ரயில்வே போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

அதில், இறந்த நபர் அரக்கோணம் காந்தி நகரை சேர்ந்த ராகவன்(52) என்பதும், திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல்நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்த இவர், பணி மாறுதல் பெற்று அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலைய சிறப்பு எஸ்எஸ்ஐயாக பொறுப்பேற்றதும் தெரியவந்தது. இவர் தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் சிக்கி இறந்தாரா? அல்லது ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்எஸ்ஐ ராகவனுக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.

The post ரயிலில் பாய்ந்து திருவள்ளூர் எஸ்எஸ்ஐ தற்கொலை? appeared first on Dinakaran.

Tags : Thiruvallur SSI ,Arakkonam ,Arakkonam railway station ,Ranipet district ,Arakkonam railway police ,
× RELATED அரக்கோணம் அருகே கடன் தொல்லையால்...