×

தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தகவல்

 

வலங்கைமான், ஜூலை 27: குடவாசல் ஒன்றியத்தில் நடைபெற்ற அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கூட்டதில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் விரைவில் பள்ளி மேலாண்மை குழு மூலமாக தற்காலிக நியமனம் செய்திட தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் செளந்தராஜன் கூறினார்.
குடவாசல் ஒன்றியத்தில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கூட்டம் வட்டாரக்கல்வி அலுவலர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது. வட்டார க்கல்வி அலுவலர் 2 ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார்.

முன்னதாக மேற்பார்வையாளர் பூபாலன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளாராக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் செளந்தராஜன் பேசுகையில், பள்ளி மேலாண்மை குழு தொடர்பாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும். பள்ளி மேலாண்மை குழு தேர்ந்தெடுக்கவும் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் கூட்டம் நடத்த பெற்று செயல்படுத்த வேண்டும். பள்ளி மேலாண்மை குழு எவ்வாறு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதையும், கல்வி தரம் மேம்படுத்தப்பட பின்பற்ற ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் பேசினார். குடவாசல் ஒன்றியத்தில் காலிப்பணியிடங்கள் விரைவில் பள்ளி மேலாண்மை குழு மூலமாக தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்து பள்ளிகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என கூறினார். முடிவில் பயிற்றுநர் கவிதா நன்றி கூறினார்.

The post தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தகவல் appeared first on Dinakaran.

Tags : District Elementary Education ,Valangaiman ,Gudavasal Union ,Education ,Dinakaran ,
× RELATED வலங்கைமான் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு நேர்த்திக்கடன்