×

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கு மேல் உயர்வு..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1220 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 81,200 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. பார்த்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், ஜேஎஸ் ஸ்டீல், டாடா ஸ்டீல் பங்குகள் தலா 3%-க்கும் விலை உயர்ந்தும், இன்போசிஸ், எச்.சி.எல். டெக் பங்குகள் தலா 2.9% கோட்டக் வங்கி, சன்பார்மா பங்குகள் தலா 2.0% விலை உயர்ந்தும் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 29 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 402 புள்ளிகள் உயர்ந்து 24,808 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

The post மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கு மேல் உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : SENSEX ,MUMBAI ,Parthi Airtel ,Adani Ports ,JS Steel ,Tata Steel ,Infosis ,H. C. L. Tech ,Mumbai Stock Exchange ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 611...