×

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு பாஜ அரசை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்: அமைச்சர்கள் அறிவிப்பு

 

காரியாபட்டி, ஜூலை 26: ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜ.வை கண்டித்து நாளை விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம்தென்னரசு ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு: திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜ அரசை கண்டித்து நாளை காலை 10 மணியளவில் விருதுநகர், மாரியம்மன் கோவில் திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக செயலாளர்கள், மாவட்டப் பிரதிநிதிகள், வட்ட, கிளை கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

 

The post பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு பாஜ அரசை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்: அமைச்சர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : BJP government ,Tamil Nadu ,KARIYAPATTI ,EU ,Virudhunagar ,Southern District ,Chathur Ramachandran ,Northern ,District ,Dangamdenarasu ,
× RELATED காரியாபட்டியில் பராமரிப்பின்றி...